ஸ்கூட்டியில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை கோர்ட் அதிரடி
கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை - 2லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு,16"கிலோ கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10"ஆண்டு சிறை தண்டனையும் 2"லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை - 2லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு,16"கிலோ கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10"ஆண்டு சிறை தண்டனையும் 2"லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Advertisment
ஈரோடு அருகே உள்ள பள்ளபாளையம்,சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன், இவரது மனைவி பூங்கோதை(46)கடந்த 2020"ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு , வீரப்பன் சத்திரம் அருகே ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது பூங்கோதையை , போலீசார் சோத னையிட்டுள்ளனர்.இவரின் இரு சக்கர வாகனத்தில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்து பூங்கோதையை கைது செய்து கோவை இ.சி. கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் பூங்கோதைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் பரபரப்பு தீர்ப்பளித்தார்.
செய்தி: ரஹ்மான், கோவை
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news