Advertisment

முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகரை தட்டித் தூக்கிய இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-க்கு செக்!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரை அ.தி.மு.க பக்கம் இழுத்த எடப்பாடி பழனிச்சாமி; முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகரை தட்டித் தூக்கிய இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-க்கு செக்!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.

Advertisment

தென்காசி மாவட்டத்தில் தனிச்செல்வாக்கோடு இருப்பவர் தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் தி.மு.க.,வில் சீட் எதிர்பார்த்து வேலை செய்து வந்தார். குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது ஸ்டாலின் அறிவுரையை ஏற்று தனது சொந்த நிதியில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், தென்காசி மாவட்டத்தில் ஏழை வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு செல்வாக்கு இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல தி.மு.க அரசு: ஸ்டாலின் விளக்கம்

இந்தநிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வில் சீட் கிடைக்காததால் அ.ம.மு.க.,வில் இணைந்தார். அங்கு டி.டி.வி தினகரனின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தவர், கட்சியிலிருந்து வெளியேறி, தனது தொழில்களை மட்டும் கவனித்து வந்தார். அதேநேரம், அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

தென்காசி மாவட்டத்தில் அய்யாதுரை பாண்டியனுக்கு உள்ள செல்வாக்கை அறிந்து பா.ஜ.க, அவரை இழுக்க திட்டமிட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி முந்திக் கொண்டு அய்யாதுரை பாண்டியனை அ.தி.மு.க.,வில் இணைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளவருமான அய்யாதுரை பாண்டியனை அ.தி.மு.க.,வுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார் இ.பி,எஸ். அய்யாதுரை பாண்டியனிடம் இ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசி, கட்சியில் சேர அழைப்பு விடுத்தனர். அப்போது அய்யாதுரை பாண்டியன் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இ.பி.எஸ் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இ.பி.எஸ் தனது சேலம் வீட்டுக்கு வருமாறு அய்யாதுரை பாண்டியனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மூலம் அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, விஜய தசமியான இன்று எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார் அய்யாதுரை பாண்டியன். அவருடன் 10,000 பேர் இணையவுள்ள நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களுடன் கூடிய பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. விரைவில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தயாரானதும் தென் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவை நடத்த அய்யாதுரை பாண்டியன் திட்டமிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாயத்தை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.,வில் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment