திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு கன்னியாகுமரி கடற்கரை தாண்டி பல சுற்றுலாப் இடங்கள் உள்ளன. அதில் முக்கியமானது செயற்கை குற்றலாம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவி ஆகும்.
இந்த நிலையில், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இது கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை 1) நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil