தீ விபத்தில் சிக்கிய தி சென்னை சில்க்ஸில் ரூ.300 கோடி வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தீ விபத்தினால் தி சென்னை சில்க்ஸ் கடையில் கிட்டத்தட்ட ரூ.300 கோடி சேதம் ஏற்பட்டிருக்கலாம். கடும் வெப்பத்தின் காரணமாக பாதுகாப்பு பெட்டியை வெளியே எடுக்கமுடியவில்லை. கடையினுள் 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி இருந்திருக்கலாம். மேலும், ரூ.20 மதிப்பிலான வைர நகை இருந்திருக்கலாம். கடையினுள் இருந்த துணிகளின் மதிப்பு ரூ.80 கோடிக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கட்டடம் இடிந்து விழுந்த போதிலும் லாக்கரில் இருக்கும் நகைகள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடையில் இருந்த பொருட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நாள் முழுவதும் எரிந்த தீயினால் 150 டிகிரி அளவிற்கும் மேலாக வெப்பம் பதிவாகி இருக்கக்கூடும். இதனால், நகைகள் உருகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இந்த லிங்க வழியாக படிக்கலாம்...https://www.ietamil.com/tamilnadu/chennai-silks-shop-will-be-destroy-completely-in-3-days/