Advertisment

புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather chennai, tamil nadu, வானிலை இன்று, kodaikanal weather

Chennai Weather News In Tamil

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிககி விடுத்துள்ளது.

Advertisment

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

பாலசந்திரன் பேசியதாவது, “ லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுப்பெற்று தெற்கு ஓமன் கரையை நோக்கி நகரும். புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக்கடலில் நிலவுகிறது.

இது புயலாக வலுப்பெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் மாறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் “ என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தினார்.

Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment