ரிமோட் வாக்குப்பதிவுமுறை கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் அனுப்பிய உள்ள கடிதத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அக்கடிதத்தில் குறிப்பிட்டதுபோல், இங்கு யாரும் இல்லை எனக் கூறி கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளது.
அ.தி.மு.கவில் ஒன்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/