Advertisment

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாய் கைது.. வெளிவந்த பகீர் தகவல்கள்!

வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் தான் இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தி இருப்பது உற்தியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொடூர தாய்

கொடூர தாய்

சென்னையில் குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்துக் கொடுத்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

கொடூர தாய்:

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் இவருடைய மனைவி அபிராமி. இந்த தம்பதியனருக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

வேலை பளு காரணமாக விஜய், நேற்று 3o.8.18 முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். பின்பு அதிகாலை வீடு திரும்பிய விஜய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்பு தனது மனைவியை தேட ஆரம்பித்தார். 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததால் தான் இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தி இருப்பது உற்தியாகியுள்ளது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment