சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானம்… 3.54 கிலோ தங்கம் கடத்தல்; 6 பேரிடம் விசாரணை
கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள், உடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள், உடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
இன்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 3.54 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஆறு பேரை பிடித்த வருவாய் புலனாய்வு பிரிவினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கமான சோதனைக்கு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உட்படுத்தினர். அதில், சந்தேகத்திற்கு இடமான ஆறு பேரை தனியாக வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து புலனாய்வு பிரிவினர் அவர்களது உடமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது அவர்களின் பேண்ட் பாக்கெட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் தெரியவந்தது. தொடர்ந்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்த பொழுது ஒருவர் மட்டும் விமான நிலையத்திலிருந்து தப்பி ஓடினார்.
தப்பி ஓடிய முகமது அன்சார் என்பவரை வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து துரத்தி பிடிக்க முற்பட்டனர். அப்போது, விமான நிலையத்தின் முன்பு இருந்த டாக்ஸி டிரைவர்கள் தப்பி ஓடி கொண்டிருந்த முகமது அன்சாரை பிடித்தனர். பின்னர், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர்.
அப்போது, முகமது அன்சாரிடம் மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி மொத்தம் 6 பேரிடம் இருந்து 3.54 கிலோ தங்கமானது பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 6 பேர் இடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"