Advertisment

சபாநாயகருக்கு எதிரான வழக்குகள் மீது 16ம் தேதி விசாரணை

சபாநாயகர் உத்தரவை ரத்து செய்யக் கோரிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடந்த வழக்கு உள்பட, சபாநாயகருக்கு எதிரான வழக்குகள் 16ம் தேதி விசாரிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேல்துரை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், தங்களுக்கு எதிரான சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு, திமுக உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிரான அவை உரிமைகுழு நோட்டீஸ் அனுப்பிய வழக்கு ஆகியவை வரும் 16 ஆம் தேதி, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றது.

Advertisment

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ. க்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி (2017) தங்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை தமிழக சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதால் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்களுக்கு எதிராக அவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த இரண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவோ, 18 தொகுதிகளையும் காலியாக அறிவித்து தேர்தல் தேதியை அறிவிக்கவோ கூடாது, அதே போல் அவை உரிமை குழு நோட்டீஸ் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே போல் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம், செம்மலை உள்ளிட்ட 12 அதிமுக எம்.எல்.ஏ கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி மனுவும்,

கட்சி உத்தரவுகளையும், கொறடா உத்தரவையும் மீறி வாக்களித்தவர்களுக்கு எதன் அடிப்படையில் அமைச்சர் பதவிகள் வழங்கபட்டது. எதிர்த்து வாக்களித்த போது அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விடுகின்றனர். எனவே துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

இதே போல் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ கள் கடிதம் அளித்தனர். அதில் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்தனர். இதனை அடுத்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த அனைத்து மனுக்களும் உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இந்த வழக்குகள் அரசியல் சாசன உரிமைகள் குறித்த வழக்கு என்பதால் இதனை ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்க தலைமை நீதபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும், இந்த வழக்கு அரசியல் அமைப்பு பிரச்சினைகளில் அளுநர் மற்றும் சபாநாயகர் அதிகாரங்களில் தலையிட முடியுமா? என்ற கேள்வி மற்றும் வழக்கின் முக்கியத்துவம் கருதி மாற்றுவதாக தனி நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புதிதாக அமைக்க உள்ள அமர்வு விசாரிக்கும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரணை எடுத்துகொள்ள கோரி டி.டி.வி தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏகள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் ஆஜராகி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ- கள் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளர். இது தொடர்பான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை அடுத்து தனி நீதிபதியின் பரிந்துரை செய்த அனைத்து வழக்குகளையிம் வரும் 16 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அன்று வழக்கு தள்ளிவைக்க கோரக்கூடாது. அதற்கு ஏற்றது போல் அனைத்து தரப்பினரும் இருக்க வேண்டும் என தெரிவித்த தலைமை இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத எதிர் மனுதரார்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment