Advertisment

குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி: டிடிவி அணியினர் குற்றச்சாட்டு

எங்களை நீக்கி விட்டு குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர் என குறித்து டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி: டிடிவி அணியினர் குற்றச்சாட்டு

எங்களை நீக்கி விட்டு குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர் என 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.

இந்த இணைப்புக்கு பின்னர், அக்கட்சியில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் பழனிச்சாமியின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்ல எனவும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தொடர்ந்து, டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். இதையடுத்து, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றதில் முறையிடுவோம் என டிடிவி தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், கொறடாவின் உத்தரவை மீறியவர்கள் இபிஎஸ் அணியினர் தான் நாங்கள் இல்லை, பன்னீர்செல்வம் அணியினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் ஒரு முறை ஜால்ரா தட்டினால் எனக்கும் விலக்கு கிடைக்கும் என குறிப்பிட்ட வெற்றிவேல், எங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. கூண்டோடு தகுதி நீக்கம் செய்வது ஜனநாயக படுகொலை. சபாநாயகர், கொறடாவின் நடவடிக்கையாக இதை பார்க்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அக்கிரமம் தான் இது என சாடினார்.

எங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமானால், நாங்கள் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், சட்டப்பேரவை கூடும் போது கட்சி உத்தரவை மீறி அதனை எதிர்த்து செயல்பட வேண்டும். ஆனால், நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றும் வெற்றிவேல் விளக்கமளித்தார்.

மைனாரிட்டியை சரிகட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இது எனவும், எங்களை நீக்கி விட்டு குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க பார்கிறார்கள் எனவும் வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment