Advertisment

'என்னை அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே குத்திக் கொன்றேன்': குற்றவாளியின் வீடியோ வாக்குமூலம்

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆகாஷ், ஏன் கொன்றேன் என்பதை, வீடியோ வாக்குமூலமாக அளித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thilagavathy murder cuddalore pmk vck news in tamil - என்னை அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே குத்தி கொன்றேன் : குற்றவாளியின் வீடியோ வாக்குமூலம்

thilagavathy murder cuddalore pmk vck news in tamil - என்னை அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே குத்தி கொன்றேன் : குற்றவாளியின் வீடியோ வாக்குமூலம்

பள்ளியிலிருந்தே பழகி வந்த பெண் அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே, அவளை கத்தியால் குத்திக்கொன்றதாக குற்றவாளி ஆகாஷ் தான் அளித்த வீடியோ வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்துடன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மகள் திலகவதி. இவர் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன், தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் வழியில் திலகவதி உயிரிழந்தார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார், பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை கைது செய்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆகாஷ், ஏன் கொன்றேன் என்பதை, வீடியோ வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, தானும், திலகவதியும் ஒரே பள்ளியில் படித்தோம். படித்துமுடித்தபிறகு அவள் கல்லூரியில் சேர்ந்தாள். நான் வேலைக்கு சென்று விட்டேன். எங்கள் நட்பு இன்றளவும் தொடர்ந்தது. சம்பவம் நடந்த அன்று அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் என்னை அடித்தாள். என்மீது தண்ணீர் ஊற்றினாள். அந்த ஆத்திரத்தில் அவளை கத்தியால் குத்தி கொன்றதாக ஆகாஷ் கூறினான்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment