Advertisment

திருமழிசை அங்காடியில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? - அறிக்கை கேட்டு உத்தரவு

அதனால் வியாபாரிகளுக்கு முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் திருமழிசையில் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live tamilnadu

Tamil News Today Live tamilnadu

திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கோயம்பேட்டில் சமூக இடைவெளியை வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் பின்பற்றாததால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்த உத்தரவிட கோரி கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க துணை தலைவர் ஜெயசீலன் தாக்கல் செய்த மனுவில் அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சங்கத்தின் சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா - எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

அந்த கூடுதல் மனுவில், கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு இருந்ததால் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பில் இருந்த 7500 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். வணிக வளாகம் முழுதும் மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோயம்பேட்டு வணிக வளாகத்தை சேர்ந்தவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதா என்பது தெரியாத நிலையில், திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைக்கு மாற்றுவதால் தொற்று இருந்தால் பரவ வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனால் வியாபாரிகளுக்கு முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதான் திருமழிசையில் வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

மது விற்பனை; நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் - மநீம வழக்கு

எனவே கோயம்பேடு அங்காடியை சார்ந்தவர்களிடம் அதிக அளவிலான பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், அவர்களில் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment