Advertisment

திருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

அவர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருமுருகன் காந்தி விடுதலை

திருமுருகன் காந்தி விடுதலை

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள 8 வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முகிலன் காணாமல் போனதாக நடத்திய போராட்டம், கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், கடந்த மே மாதம் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்தும் போராட்டம் என தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தொடர்ந்து ஒரு ஜாதிக்கு எதிராக மக்களிடத்தில் தேவையற்ற கருத்துக்களை துணித்ததாகவும்,

உயர்நீதிமன்ற உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், பேசியாதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த 8 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது. காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், மனுதரார் மீதான குற்றசாட்டுக்கு ஆதாரம் உள்ளதாகவும், அவர் தொடர்ந்து சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஒரு ஜாதிக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், தொடர்ந்து பேசியுள்ளார்.

எனவே இந்த வழக்குகளை ரத்து செய்ய கூடாது எனவும் விசாரணை எதிர்கொள்ள மனுதரார்க்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதரார், பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் பொழுது அவர் மீது காவல்துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருப்பதாகவும்,அவர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

னவே மனுதரார் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வாழ்க்கை எதிர் கொள்ள வேண்டும். என தெரிவித்து திருமுருகன் காந்தியின் 8 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chennai High Court Thirumurugan Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment