Advertisment

மூன்று வயது குழந்தை அடித்துக் கொலை? தந்தை புகார்; தாய் மற்றும் இரண்டாவது கணவரிடம் போலீசார் விசாரணை

Three Year Old Girl Suspicious Death Police investigate: சென்னை புழலில் மூன்று வயது குழந்தையை தாயின் இரண்டாவது கணவர் அடித்துக்கொலை செய்ததாக குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் அவரது 2வது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Three Year Old Girl Suspicious Death, Three Year Old Girl death, மூன்று வயது பெண் குழந்தை சந்தேக மரணம், தாய், இரண்டாவது கணவரிடம் விசாரணை, சென்னை, புழல், child Girl Suspicious Death in puzhal, child Girl Suspicious Death in chennai, police investigate at mother and stepfather

Three Year Old Girl Suspicious Death, Three Year Old Girl death, மூன்று வயது பெண் குழந்தை சந்தேக மரணம், தாய், இரண்டாவது கணவரிடம் விசாரணை, சென்னை, புழல், child Girl Suspicious Death in puzhal, child Girl Suspicious Death in chennai, police investigate at mother and stepfather

Three Year Old Girl Suspicious Death,Police investigate: சென்னை புழலில் மூன்று வயது பெண் குழந்தையை தாயின் இரண்டாவது கணவர் அடித்துக்கொலை செய்ததாக குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் அவரது 2வது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

சென்னையில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் பவானி (21). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வியாசர்பாடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருடன் வாழ்ந்த காலத்தில் அவருக்கு யாழினி என்ற பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. திருமண பந்தல் அலங்காரம் வேலை செய்துவரும் ரமேஷுக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாக கூறி பவானி நான்கு மாதங்களுக்கு முன்பு ரமேஷை விட்டு பிரிந்து ஆசிஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் சென்னை புழல் பகுதியில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பவானியும் ஆசிஃப்பும் மூன்று வயது குழந்தை பவானியை தூக்கிக்கொண்டு சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் மருத்துவரிடம் குழந்தை மேஜை மீது இருந்து கீழே விழுந்துவிட்டது என்று கூறியுள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மருத்துவர்களும் குழந்தைக்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி ஏதும் சந்தேகப்படவில்லை. இதனால், பவானி ஆசிஃப் இருவரும் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இதனிடையே பவானியின் முதல் கணவரும் குழந்தையின் தந்தையுமான ரமேஷுக்கு குழந்தை இறந்தது பற்றி தகவல் தெரியவந்தது. தனது குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த ரமேஷ், காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தனது குழந்தை அவருடைய தாய் பவானி மற்றும் ஆசிஃப் இருவரும் அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட புழல் போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், இறந்த குழந்தையின் நெற்றி, மார்பு, வயிற்றில் காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் ஆசிஃப் மற்றும் பவானியிடம் நடத்திய விசாரணையில், குழந்தை வாந்தி எடுத்ததாகவும் பின்னர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், விசாரணையில், இரவில் குழந்தை அழும்போது ஆசிஃப் குழந்தையை அடித்திருப்பது தெரியவந்தது. அவர் தூங்கும்போது குழந்தை யாழினி தொந்தரவு செய்ததால் அவர் குழந்தையை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதில் போலீசார் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு ஆசிஃப் அடித்திருக்கலாம் அதனால் குழந்தை இறந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.  மேலும், குழந்தையின் இறப்பை மறைக்க தாய் பவானியும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் குழந்தையின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடியும் என்பதால் புழல் போலீசார் காத்திருக்கின்றனர்.

Chennai Puzhal Aeri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment