Advertisment

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்

சென்னை விமான நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பரந்தூர் அருகே 20,000 கோடி ரூபாய் செலவில் 2-வது விமான நிலையத்தை அமைக்க 5,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்

சென்னை விமான நிலையத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பரந்தூர் அருகே 20,000 கோடி ரூபாய் செலவில் 2-வது விமான நிலையத்தை அமைக்க 5,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

Advertisment

பரந்தூரில் வசிப்பவர்கள் மற்றும் விமான நிலையம் கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்பான பிரச்னைகளை உயர்மட்ட தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்யும்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ சென்னையின் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூரில் இடத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பாரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கு இடம் அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவை முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு மாதங்களில், இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து கேள்விகளை எழுப்பியதாகவும், டிட்கோ தனது பதிலை சமர்ப்பித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில், உயர்மட்ட தொழில்நுட்பக் குழு பரந்தூரில் வசிப்பவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் இடமாற்றம், இந்த இடத்தில் நீர்நிலைகள் இருப்பது மற்றும் வெள்ள அபாயம் குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்யும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில், டிட்கோ விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை, மாஸ்டர் பிளான், நிலம், நீர் மற்றும் காற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் பிற தொடர்புடைய ஆய்வுகள், நிதி மாதிரிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தேவையான ஒப்புதல்களைப் பெறுபவர்களுக்கு உதவுதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள ஆலோசகரைத் தேடுவதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டது. இதற்கான ஒப்பந்தம் கோருவதற்கு விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான தேதியை பிப்ரவரி 6ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

ரூ.20,000 கோடி செலவில் இரண்டு ஓடுபாதைகளைக் கொண்ட இந்த விமான நிலையமானது தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது என்றும் மாநில அரசு அறிவித்திருந்தது. விமான நிலையத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கண்டறிந்துள்ளதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும் டிட்கோ கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment