Advertisment

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது; நண்பர் சிக்காவும் சிக்கினார்!

டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tik Tok fame Rowdy Baby Surya arrested, Rowdy Baby Surya arrested, Rowdy Baby Surya - Sikka arrested, டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது, டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது, ரவுடி பேபி சூர்யா கைது, ரவுடி பேபி சூர்யா, Rowdy Baby Surya, Rowdy Baby Surya and her friend Sikkanthar arrested, Rowdy Baby Surya arrested in Madurai

Tik tok fame Rowdy Baby Surya arrested in Goondas act: டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனால் பல சிக்கல்களையும் ரவுடி பேபி சூர்யா சந்தித்தார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயலும் அளவுக்கு இருவருக்கு சிக்கல் எழுந்தது. இருப்பினும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார் ரவுடி பேபி சூர்யா.

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: இறுதி கட்டத்தில் சீமை கருவேல மரங்களை அழிக்கும் திட்டம்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Goondas Act
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment