Advertisment

மார்ச் 22 வரை தமிழக பட்ஜெட் மீதான விவாத கூட்டம் - சபாநாயகர் தனபால்

பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் 22-ம் தேதி வரை நடைபெறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மார்ச் 22 வரை தமிழக பட்ஜெட் மீதான விவாத கூட்டம் - சபாநாயகர் தனபால்

பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் 22-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தனபால், "காவிரி விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு அமர்வு நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மார்ச் 16 பேரவைக் கூட்டம் இல்லை. 17, 18 தேதிகள் அரசு விடுமுறை. 19ம் தேதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பொது விவாதம் தொடங்கப்படும். 20ம் தேதி 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை மீது பொது விவாதம்.

21ம் தேதி இரண்டாம் நாள் பொது விவாதம். 22ம் தேதி கேள்வி நேரம் இல்லை. பேரவை முன் பண மானியக் கோரிக்கை, இறுதி துணைநிலை அறிக்கை அளித்தல். அதனை தொடர்ந்து மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மானியக் கோரிக்கை நிதி ஒதுக்க சட்டமுன் வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. முன்பண மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி ஒதுக்க சட்டமுன் வடிவை தொடர்ந்து பொது விவாதம் மற்றும் அமைச்சர் பதிலுரை அளிப்பார். இறுதியாக அரசின் சட்டமுன் வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்" என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment