Advertisment

17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: மதுரை, நெல்லைக்கு புதிய கமிஷனர்

மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: மதுரை, நெல்லைக்கு புதிய கமிஷனர்

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐ.ஜி. பதவியிலிருந்து ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

  • மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தென் மண்டல ஐ.ஜியாக இருந்த டி.எஸ்.அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நெல்லை மாநகர கமிஷனராக சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதுரை மாநகர கமிஷனராக டி.செந்தில்குமார் நியமனம்.
  • சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,யாக ஏ.டி.துரை குமார் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுவிலக்கு அமலாக்கப்பரிவு ஐ.ஜியாக துரைக்குமாரும், காவல் துறை விரிவாக்கப்பரிவு ஐ.ஜியாக மல்லிகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ips Officers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment