தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 35 பேரும், மற்ற பல்வேறு காய்யச்சல் காரணமாக 85 பேரும் உயிரிழந்தததாக தெரிவித்தார்.
மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலாம் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். சுமார் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மக்கள் டெங்கு காய்ச்ல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தமிழகத்தில் டெங்கு காய்யச்சல் பாதிப்பால் 35 பேரும், மற்ற பல்வேறு காய்ச்சல் பாதிப்பால் 85 பேரும் உயிரிழந்துள்ளனர். போலியோவைப் போல தடுப்பு ஊசி போட்டு டெங்கு காய்ச்சலை தடுக்க முடியாது. எனவே, குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் கொசு உற்பத்தியாவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.