கவர்னர் வித்யாசாகர் ராவ்வை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மாலை திடீரென சந்தித்தார். இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவை கூட்டம் மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் தலைமை செயலாளர் ராஜ்பவனுக்கு புறப்பட்டுச் சென்றார். திடீரென தலைமைச் செயலாளர் கவர்னரை சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்துகாகவா? அல்லது அமைச்சரவை முடிவுகளை கவர்னரிடம் தெரிவிக்கச் சென்றாரா என்பது தெரியவில்லை.