tamilnadu news live : எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
NGK Movie Review படிக்க வேண்டுமா?
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக அரசின் இந்த நடவடிக்கை மக்களை கவலையடைச் செய்துள்ளது. எனினும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வரும் ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Live Blog
news in tamil live updates : சேலம் எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஜுன் 9-ம் தேதி இலங்கை வருவதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாலத்தீவு பயணத்தை ஜுன் 8-ம் தேதி முடித்து விட்டு திரும்பும் வழியில் மோடி இலங்கை செல்கிறார்.
Sri Lankan President Maithripala Sirisena confirms that PM Modi will visit Sri Lanka early June, after the Maldives visit. The two leaders met today in Delhi. @IndianExpress pic.twitter.com/naO7yxXA2V
— Shubhajit Roy (@ShubhajitRoy) 31 May 2019
சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் . மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பாமக போராடும் - எனவும் அன்புமணி கருத்து.
புதுச்சேரியில் ஜூன் 3ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்
மொத்தமாக 277 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலை கட்டமைப்புக்கு வேண்டி காஞ்சிபுரம், சேலம், தரும்பரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், விவசாய நிலங்களை கையகப்படுத்தவதற்உ எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாஜக அணியில் அதிமுக இல்லையா? அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட முழுப் பின்னணி
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights