KTC பெல்ட் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று தகவல் பகிர்ந்துள்ளார்.
அதில், "மேகங்கள் மேற்கில் சூழ்கின்றன. இதனால், நகரின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யாது. ஆனால், நிச்சயம் நகரின் சில பகுதிகள் மழை பெறும். நகரின் வெளிப்பகுதிகளிலும் நிச்சயம் மழை பொழியும். இந்த சிறிய வகை மழை பொழிவு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வரை தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆக, அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எந்த பகுதியில் வசித்தாலும், நிச்சயம் அலுவலகமோ அல்லது வெளியே செல்லும் போதோ, மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்தையும் தயார் செய்து கொள்வது நல்லது.