Advertisment

200 டிஎம்சி அடியை நெருங்கும் தமிழகத்தின் மொத்த சேமிப்பு; நீர்தேக்கங்களின் கொள்ளளவு விவரம்

Total storage in Tamil Nadu reservoirs approaching 200 TMC ft: தமிழக நீர்தேக்கங்களின் கொள்ளளவு 200 டிஎம்சியை நெருங்கிறது; நீர்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவு விவரம் இதோ…

author-image
WebDesk
New Update
Sluice gates of Mettur dam opened in Salem

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு 200 டிஎம்சி அடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Advertisment

நேற்று நவம்பர் 10 ஆம் தேதி, நீர்தேக்கங்களின் கொள்ளளவு 199.165 டிஎம்சி அடியாக இருந்தது, இது 90 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 89% ஆகும். அதேநேரம் கடந்த ஆண்டு இதேநாள் நவம்பர் 10, 2020 அன்று, இந்த அளவு சுமார் 140 டிஎம்சி அடியாக இருந்தது, இது அந்த நீர்தேக்கங்களின் கொள்ளளவில் 63% ஆகும். தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டிஎம்சி அடி.

மாநிலத்தின் தற்போதுள்ள மொத்த சேமிப்பில், காவிரி படுகையில் உள்ள மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு 126.827 டிஎம்சி அடியாக உள்ளது, இதில், மேட்டூரில் 91.883 டிஎம்சி அடியும், பவானிசாகரில் 31.131 டிஎம்சியும் அமராவதியில் 3.8 டிஎம்சியும் அடங்கும். மூன்று நீர்தேக்கங்களுமே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

பரம்பிக்குளம் குழும நீர்த்தேக்கங்களைப் பொறுத்தவரை, நான்கு பெரிய நீர்த்தேக்கங்களான பரம்பிக்குளம், ஆழியார், சோலையார் மற்றும் திருமூர்த்தி ஆகியவை போதுமான சேமிப்புகளைக் கொண்டுள்ளன. 87% கொள்ளளவு கொண்ட திருமூர்த்தியைத் தவிர, மற்ற மூன்று நீர்தேக்கங்களும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன.

முல்லைப் பெரியாறு-வைகை நீர்தேக்கத்தைப் பொறுத்தவரை, முந்தைய சேமிப்பு 6.8 டிஎம்சி அடி, இது அனுமதிக்கப்பட்ட 7.67 டிஎம்சி அடி சேமிப்பில் 89% ஆகும். பிந்தைய சேமிப்பான 5.639 டிஎம்சி அடி, அதன் கொள்ளளவு 93%க்கு சமம்.

கன்னியாகுமரியின் இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி நீர்தேக்கங்கள் சுமார் 85% கொள்ளளவைக் கொண்டுள்ளது.

மாநிலத்தின் வடமாவட்டங்களைப் பொறுத்தவரை, இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமான சாத்தனூர் புறம்போக்கு நீர்த்தேக்கமாக உள்ளது, அதன் இருப்பு அதன் கொள்ளளவில் பாதியை கூட தொடவில்லை. நீர்த்தேக்கத்தின் தற்போதைய சேமிப்பு 3.392 டிஎம்சி அடி, இது அதன் கொள்ளளவில் 46% ஆகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரியான வீராணம், அதன் கொள்ளளவில் 61% அதாவது, 0.892 tmc நீரைக் கொண்டுள்ளது.

சென்னைக்கு தண்ணீர் வழங்கும் நீர்த்தேக்கங்களைப் பொறுத்தவரை, மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், அவற்றின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவற்றின் ஒருங்கிணைந்த சேமிப்பு 73% முதல் 83% வரை மாறுபடுகிறது.

காவிரி நீரைப் பொறுத்தவரை, ஜூன் 1 முதல் மொத்த நீர் திறப்பு 150 டிஎம்சி அடியை தாண்டியுள்ளது. நவம்பர் 8-ம் தேதி வரை சுமார் 151.64 டிஎம்சி அடியாக இருந்தது, இது கடந்த காலத்தில் தமிழகத்தின் பங்கை விட 4.6 டிஎம்சி அடி அதிகமாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Rain In Tamilnadu Mullaperiyar Dam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment