Advertisment

திருச்சி கட்டட விபத்து: எதையும் கண்டுகொள்ளாத உரிமையாளர் கைது!

திருச்சி மலைக்கோட்டையில் 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் கண்ணப்பனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருச்சி கட்டட விபத்து: எதையும் கண்டுகொள்ளாத உரிமையாளர் கைது!

மலைக்கோட்டையில் 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Advertisment

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சாவூர் குளத்தெரு பகுதியில், 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடிந்துவிழுந்தது.

இதில், முதல் மாடியில் வசித்த பழனி (30) அவரது மனைவி ராஜாத்தி (26), இரண்டாவது மாடியில் குடியிருந்த கார்த்திக் (36), அவரது 6 வயது மகன் ஹரீஷ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய கார்த்திக்கின் மனைவி, உயிரிழந்த பழனி - ராஜாத்தி தம்பதியின் ஒன்றரை வயது மகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

7 மணி நேரத்திற்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய அந்த ஒன்றரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையின் சத்தம் கேட்டதையடுத்து, மீட்புப்பணியினர் பொறுமையுடன் இடிபாடுகளை அகற்றி அக்குழந்தையை உயிருடன் மீட்டனர். இதன் பின்னர் அந்தக் குழந்தையை முதலுதவிக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, உயிரிழந்த நான்கு பேருக்கும், தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் நேற்றிரவு பெய்த கடும் மழையால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்திற்கு அருகே இருந்த மற்றொரு கட்டடம் அண்மையில் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கட்டடம் வலுவிழந்திருக்கலாம் என்றும், மழை காரணமாக மேலும் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கட்டடம், 70 ஆண்டுகள் பழமையானது. மாடிகள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன் விதிகளை மீறியும் தரமற்ற முறையிலும் கட்டப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, கட்டடத்தின் பல பகுதிகள் விரிசல் இருந்துள்ளது. குடியிருந்தவர்கள், வீட்டு உரிமையாளர் கண்ணப்பனிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

ஒரு வாரத்துக்கு முன், கட்டடத்தின் தரை தளம் பூமிக்குள் சற்று இறங்கியுள்ளது. இதையும் கண்ணப்பன் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், மலைக்கோட்டையில் 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் கண்ணப்பனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment