Advertisment

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த தி.க நிர்வாகி; ரயில் மோதி மரணம்: திருவெறும்பூர் விபரீதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து திராவிடர் கழக நிர்வாகி தற்கொலை- போலீஸ் தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த தி.க நிர்வாகி; ரயில் மோதி மரணம்: திருவெறும்பூர் விபரீதம்

 Trichy Dravidar Kazhagam functionary suicide in railway track: திருவெறும்பூர் அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் முன்பு படுத்து தற்கொலை செய்துகொண்ட திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவரின் உடலை பொன்மலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

இது பற்றிய விபரம் பின்வருமாறு: நேற்று (ஆகஸ்ட் 23) பகல் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி கூட்ஸ் ரயில் சென்றது. திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்த பொழுது ரயில் முன் வாலிபர் ஒருவர் ரயில்வே பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வதற்காக படுத்து உள்ளார். கூட்ஸ் ரயில் டிரைவர் எவ்வளவோ எச்சரித்து சத்தமிட்டும் வாலிபர் கேட்காமல் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: எல்.ஜி.பி.டி.க்யூ பிரிவினரை எப்படி அழைக்க வேண்டும்? சொல்லகராதியை வெளியிட்ட தமிழ அரசு

இந்த நிலையில் ரயிலை நிறுத்த முடியாமல் அந்த வாலிபரின் மீது கூட்ஸ் ரயில் ஏறி 20 மீட்டர் தூரம் தள்ளி போய் நின்றது. சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உடனடியாக பொன்மலை ரயில்வே போலீசருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்தது தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை செய்ததில் இறந்தவர் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசித்து வந்த பச்சையப்பன் என்பவரின் மகன் சுரேஷ் வயது 40 என்பதும் இவர் திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவராக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இவரது மனைவி சாந்தி கூலித்தொழிலாளி மகன்கள் அன்புச்செல்வன்(13) இவன் ஒன்பதாவது வகுப்பும், அறிவுச்செல்வன்(15) 11-வது வகுப்பும் பாய்லர் பிளாண்ட் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் பெல் நிறுவன கணேசா பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தியுள்ளார் சமீபகாலமாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்னை மன்னித்துவிடு என்று மனைவிக்கு பேசி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? வேறு ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment