Advertisment

திருச்சியில் ஆடி பதினெட்டு வெகு உற்சாகம்; குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி

ஆடி பதினெட்டு விழா; திருச்சி காவிரிக் கரையில் குவிந்த பொதுமக்கள்; மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு; புதுமணத் தம்பதியினர் உற்சாகம்

author-image
WebDesk
New Update
திருச்சியில் ஆடி பதினெட்டு வெகு உற்சாகம்; குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி

Trichy people celebrate Aadi peruku function at Cauvery river: காவிரித் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா டெல்டா மாவட்டங்களில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி உள்ளிட்ட நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டும், புத்தாடை உடுத்தியும், புதிய மஞ்சள் கயிறு அணிந்தும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

திருச்சியில் வருடம் தோறும் இன்று கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஒன்று திரண்டு அம்மனுக்கு படையல் இட்டு, மஞ்சள் கயிறு கட்டி உச்சமாக கொண்டாடுவர். அந்த வகையில், இன்று நடைபெற்று வரும் ஆடிப்பெருக்கில் காவிரி கரைகளில் பொதுமக்கள் திரண்டிருக்கின்றனர்.

publive-image

இதையும் படியுங்கள்: செஸ் ஒலிம்பியாட்-க்கு பெருமை சேர்த்த ‘தம்பி’ சிலை உருவானது எப்படி? வடிவமைத்த தியாகராஜன் Exclusive பேட்டி

காவிரி கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

publive-image

கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த வருடம் தொற்று பாதிப்பு குறைவு காரணமாக நீர் நிலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக அதிகாலை முதலே பொதுமக்களும், புதுமண தம்பதிகளும் காவிரி ஆற்றங்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் குளித்து, காவிரி தாயை வணங்கி ஆடிப்பெருக்கு விழாவை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

publive-image

திருச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்ட பகுதிகள் பாதுகாப்பானதாக கண்டறியப்பட்டுள்ளதாலும், அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாலும் ஆடிப்பெருக்கினை இந்த பகுதிகளில் மட்டுமே பொதுமக்கள் கொண்டாடி மகிழ திருச்சி ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி மாவட்டத்தில், தொட்டியம் வட்டம் : - 1. உன்னியூர் 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி 3. ஸ்ரீராமசமுத்திரம் 4. சீலைப்பிள்ளையார் புத்தூர் 5. காடுவெட்டி 6. நத்தம் 7. எம்.புத்தூர் பாளையம் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்) 9. சீனிவாசநல்லூர் (மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம் 10. மணமேடு

11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை)

முசிறி வட்டம் :- 1. முசிறி மேற்கு காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம்.

ஸ்ரீரங்கம் வட்டம் :- 1. பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை) 2. முக்கொம்பு, 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை, 6. பளுர் படித்துறை 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை 9. அந்தநல்லூர் படித்துறை 10. திருப்பராய்துறை – துலாஸ்தானம், 11. மேலூர் அய்யனார் படித்துறை 12. கீதாபுரம் படித்துறை 13. அம்மா மண்டபம் படித்துறை, 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை, 16. பனையபுரம் படித்துறை, 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை, 18. கிளிக்கூடு படித்துறை

மண்ணச்சநல்லூர் வட்டம்:- 1. கரியமாணிக்கம் மேற்கு கிராமம் - வாத்தலை, 2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் - சிறுகாம்பூர், 3. திருவாசி கிராமம் - துடையூர் களிங்காயிகோவில், 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் - நொச்சியம் மான்பிடி மங்களம், 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் - அய்யன் வாய்க்கால்.

publive-image

திருவெறும்பூர் வட்டம் :- 1. வேங்கூர் பூச படித்துறை, 2. பனையக்குறிச்சி படித்துறை, 3. கீழ முல்லக்குடி படித்துறை 4. ஒட்டக்குடி படித்துறை

இலால்குடி வட்டம் :- 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் - அப்பாத்துரை கிராமம், 2. கொள்ளிடம் ஆறு - கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி.

மாநகரப்பகுதி :- 1. அம்மா மண்டபம், 2. கருடா மண்டபம், 3. கீதாபுரம், 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை - 2, 5. காந்தி படித்துறை, 6. ஓடத்துறை, 7. அய்யாளம்மன் படித்துறை, 8. தில்லைநாயகம் படித்துறை.

மேலும் ஆடி -18 விழாவுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, மீட்புப்பணிகள்துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடி-18 விழாவினை சிறப்பாக கொண்டாடு மகிழுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

publive-image

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 650-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் படகுகள் உதவியுடனும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றனர் திருச்சி காவல்துறையினர்.

இதனிடையே, காவிரி கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஓருவருக்கு அங்கு படையலிட வந்த பெண்மணி மஞ்சள் கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

publive-image

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment