Advertisment

'ஆசிரியர்களுக்கு நிதி இல்லை; கடல்ல பேனா வைக்க ரூ89 கோடி இருக்குதா?': டி.டி.வி தினகரன் கேள்வி

ஆசிரியர்கள் சம ஊதியம் கோருவது நியாயமான கோரிக்கை. ஆனால் அரசு காலம் தாழ்த்துவது சரியானது அல்ல.

author-image
WebDesk
New Update
Tamil news

TTV தினகரன்

இடைநிலை ஆசிரியர்கள் 5ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.

இந்த நிலையில் இவர்களை சந்தித்து ஆதரவு கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு தங்களை திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்றார்.

Advertisment

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆசிரியர்கள் சம ஊதியம் கோருவது நியாயமான கோரிக்கை. ஆனால் அரசு காலம் தாழ்த்துவது சரியானது அல்ல.

மேலும் இதே போராட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆதரவு தெரிவித்து இருந்தார். ஆனால் ஆளுங்கட்சி ஆன பின்பு இவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது நியாயம் அல்ல” என்றார்.

மேலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை எனக் கூறும் அரசு கடலில் பேனா வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது.

ஆசிரியர்களின் நிலையை பார்த்தால் புத்தாண்டு வாழ்த்து சொல்ல கூட மனம் வரவில்லை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment