Advertisment

இரட்டை இலை தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்திய தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission of india, two leaves symbol, aiadmk, tamilnadu government, t.t.v.dhinakaran, deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, vk sasikala

இரட்டை இலை தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்கிற விவகாரம், டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்தது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்னொரு தரப்பாகவும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா தரப்புக்காக அபிடவிட்களை வாங்கிக்குவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்து நிற்கிறார்கள்.

இரட்டை இலை யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் உத்தரவிட்டது. பிறகு உச்சநீதிமன்றம் இந்த அவகாசத்தை நவம்பர் 10 வரை நீட்டித்தது. ஆனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணி தரப்பினர் இந்த வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டு வந்ததால் விசாரணை தள்ளிச் சென்றது.

இரட்டை இலை வழக்கில் 7-வது மற்றும் இறுதிகட்ட விசாரணை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதிடுகையில், ‘ஜெயலலிதா மரணத்தின்போது, கட்சியின் நிர்வாகிகள் யார் என்பதை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதற்கிணங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். இதன்படி, தினகரனை ஆதரித்தோர் 168 உறுப்பினர்களே! பெரும்பான்மை எங்களிடத்தில் உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டார்.

இரட்டை இலை வழக்கில் இறுதி உத்தரவை தேதி குறிப்பிடாமல் இந்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இதற்கிடையே இன்று(23-ம் தேதி) இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எந்த நேரத்திலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு டெல்லியில் வெளியாகலாம்.

இதற்கிடையே இன்று பகல் 1.30 மணிக்கு சென்னையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான உத்தரவை வழங்கியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளில் 90 சதவிகிதம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதை பரிசீலித்து தேர்தல் ஆணையம் இந்த மகிழ்ச்சியான உத்தரவை கொடுத்திருக்கிறது. இதனால் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்’ என்றார்.

பாஜக தலையீடுதான் உங்களுக்கு சின்னம் கிடைக்க காரணமா? எனக் கேட்டபோது, ‘அது தவறான தகவல்! நான் ஏற்கனவே கூறியதுபோல, அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து நியாயமான உத்தரவை வழங்கியிருக்கிறது’ என்றார்.

முதல்வர் பேட்டி அளித்த நிமிடம் வரை, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி தங்களுக்கு மகிழ்ச்சி உத்தரவு வந்துவிட்டதாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

Vk Sasikala Two Leaves Symbol T T V Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment