Advertisment

'உதயநிதி அமைச்சர் ஆனதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி': நேரில் சந்தித்த பிறகு மு.க அழகிரி பேட்டி

” எனது தம்பியின் மகன் அமைச்சராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி” என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
'உதயநிதி அமைச்சர் ஆனதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி': நேரில் சந்தித்த பிறகு மு.க அழகிரி பேட்டி

” எனது தம்பியின் மகன் அமைச்சராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி” என்று  மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டை, தொடங்கி வைப்பதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கும் வந்துள்ளார். இந்நிலையில் மதுரை, டி.வி.எஸ் நகரில் உள்ள மு.க அழகிரி வீட்டுக்கு சென்றார் உயநிதி ஸ்டாலின். மேலும் அழகிரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் உதயநிதி. கிட்டதட்ட 20 நிமிடங்கள், இருவரும் பேசிக்கொண்டனார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி “  நான் அமைச்சரான பிறகு எனது பெரியப்பாவிடம் வாழ்த்து பெற வேண்டும் என்று அவரை சந்திக்க வந்தேன். அவர் என்னை மனநிறைவோடு வாழ்த்தினார். இந்த தருணம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார் “ உதயநிதி, என்னிடம் மற்றும் எனது மனைவியிடம் ஆசீர்வாதம் பெற்றார். உதய் எனது மகன்போலத்தான். அவர் சிறு வயதாக இருக்கும்போது, நெல்லையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வருவார். எனது தம்பியான  மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்பது எனக்கு மகழ்ச்சியை தருகிறது. இதவிட வேறு என்ன வேண்டும் “ என்று கூறினார்.

மேலும் திமுகவில், இணைவீர்களா?  என்று நிருபர்கள் கேட்டபோது, அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று அழகிரி கூறினார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment