Advertisment

Russia-Ukraine crisis Highlights: மருத்துவனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

உக்ரைனில் இருந்து இதுவரை 16,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Russia Ukraine war

உக்ரைனின் இர்பின் நகரில் வயதான பெண்ணுக்கு உக்ரேனிய படைவீரர்கள் உதவுகிறார்கள். (புகைப்படம் AP /Andriy Dubchak)

உக்ரைனில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்

Advertisment

உக்ரைனில் பள்ளிகள் மருத்துவனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

16,000 இந்தியர்கள் மீட்பு

உக்ரைனில் இருந்து இதுவரை 16,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என பெயரிடப்பட்டு மீட்புப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இதுவரை 16,000 இந்தியர்களை 76 விமானங்களில் அழைந்து வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

12-ஆவது நாளாக நீடிக்கும் போர்

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா போரை தொடங்கியது. 12-ஆவது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விமான நிலையில் தகர்ப்பு

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நகரில் இருந்த விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

9 லட்சம் அகதிகள்: போலந்து

உக்ரைனில் இருந்து இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் போராட்டம்

உக்ரைனில் போர் நடத்த உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 1,700 க்கும் அதிகமானோரை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீட்புப் பணியில் இந்தியக் குழு

உக்ரைனின் சுமியில் இருந்து மேற்கு எல்லைகளுக்கு இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதை ஒருங்கிணைக்க இந்திய தூதரகக் குழு பொல்டாவா சென்றது. சுமியில் உள்ள மாணவர்கள் விரைவில் வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தங்கள் பெயர்கள் மற்றும் விவரங்களை கூகுள் படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 22:05 (IST) 07 Mar 2022
    உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி; கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு

    திங்களன்று உலகளாவிய பங்குகள் சரிந்தபோதும் எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலைகள் உயர்ந்தன, ஏனெனில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடையின் ஆபத்து விநியோகச் சங்கிலிகளை அச்சுறுத்தியது மற்றும் உலகளவில் பொருளாதாரங்களில் மேலும் பணவீக்க அழுத்தத்தை அதிகரித்தது.

    சர்வதேச அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய், சுருக்கமாக ஒரு பீப்பாய் $139 க்கும் அதிகமாக இருந்தது, இது 2008 ஆம் ஆண்டிலிருந்து அதன் அதிகபட்ச நிலையாகும். நிக்கல் 30% உயர்ந்தது, தங்கம் ஒரு அவுன்ஸ் $2,000 அதிகரித்தது மற்றும் கோதுமை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, ஏனெனில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட விநியோக இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பொருட்களின் மூலப்பொருட்களை தொழில்துறை வாங்குபவர்களும் வர்த்தகர்களும் பெற துடித்தனர். (ராய்ட்டர்ஸ்)



  • 20:46 (IST) 07 Mar 2022
    ரஷ்யா – உக்ரைன் இடையே 3-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம்

    ரஷ்யா – உக்ரைன் இடையே 3-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.



  • 20:22 (IST) 07 Mar 2022
    ரஷ்ய ஷெல் தாக்குதல் பொதுமக்களை வெளியேற்றுவதைத் தடுக்கிறது - உக்ரைன்

    கீவ், மரியுபோல், சுமி, கார்கிவ், வோல்னோவாகா மற்றும் மைகோலாயிவ் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை ரஷ்ய ஷெல் தாக்குதல் தடுக்கிறது என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    "இது உக்ரேனிய மற்றும் வெளிநாட்டு குடிமக்களுடன் மனிதாபிமான பத்திகளை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், மருந்துகள் மற்றும் உணவை வழங்குவதையும் தடுக்கிறது" என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 19:36 (IST) 07 Mar 2022
    குடிமக்களுக்கான மனிதாபிமான வழித்தடங்களை உக்ரைன் தடுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டு

    பொதுமக்களுக்கான மனிதாபிமான வழித்தடங்களை உக்ரைன் தடுப்பதாக ரஷ்ய தலைமை பேச்சுவார்த்தையாளர் குற்றம் சாட்டினார், அதை 'போர் குற்றம்' என்று அழைக்கிறார். மாஸ்கோ-கீவ் இடையேயான பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய சுற்று மனிதாபிமான வழித்தடங்களில் கவனம் செலுத்தும் என்றும் பேச்சுவார்த்தையாளர் கூறினார். (AFP)



  • 18:46 (IST) 07 Mar 2022
    சூர்யா படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக மனு

    நடிகர் சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யா, ஜெய்பீம் விவகாரத்தில் வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது



  • 18:37 (IST) 07 Mar 2022
    உக்ரைன் நிபந்தனைகளை நிறைவேற்றினால், ‘ஒரு நொடியில்’ போர் நிறுத்தப்படும் - ரஷ்யா

    உக்ரைன் இராணுவ நடவடிக்கையை நிறுத்தவும், நடுநிலைமையை நிலைநிறுத்துவதற்கு அதன் அரசியலமைப்பை மாற்றவும், கிரிமியாவை ரஷ்ய பிரதேசமாக அங்கீகரிக்கவும், டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரிவினைவாத குடியரசுகளை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கவும் ரஷ்யா கோருகிறது, என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

    உக்ரைன் தனது நிபந்தனைகளை நிறைவேற்றினால் "ஒரு நொடியில்" போரை நிறுத்தத் தயாராக இருப்பதாக உக்ரைனிடம் ரஷ்யா கூறியதாக பெஸ்கோவ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

    உக்ரேனில் அதன் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அழைக்கப்படுவதை நிறுத்துவதற்கு, அதன் 12வது நாளில், உக்ரைன் மீது சுமத்த விரும்பும் விதிமுறைகளில் இது மிகவும் வெளிப்படையான ரஷ்ய அறிக்கையாகும்.

    உக்ரைன் நிலைமைகளை அறிந்திருப்பதாக பெஸ்கோவ் கூறினார். "இதையெல்லாம் ஒரு கணத்தில் நிறுத்த முடியும் என்று அவர்களிடம் கூறப்பட்டது." மேலும், "அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும், அதன்படி உக்ரைன் எந்தக் கூட்டத்திலும் நுழைவதற்கான எந்த நோக்கத்தையும் நிராகரிக்க வேண்டும். இது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்." என்றும் அவர் கூறினார். (ராய்ட்டர்ஸ்)



  • 17:44 (IST) 07 Mar 2022
    மனிதாபிமான வழித்தடங்களில் ரஷ்யாவின் நிலைப்பாடு முற்றிலும் ஒழுக்கக்கேடானது - உக்ரைன்

    உக்ரைன் திங்களன்று, மனிதாபிமான வழித்தடங்கள் குறித்த ரஷ்ய முன்மொழிவான மக்கள் பெலாரஸ் அல்லது ரஷ்யாவிற்கு வெளியேறினால் உக்ரேனிய நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் என்பது "முற்றிலும் ஒழுக்கக்கேடானது" என்று கூறியது.

    உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், உக்ரேனிய குடிமக்கள் உக்ரேனிய எல்லை வழியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார், மேலும் ரஷ்யா வேண்டுமென்றே முந்தைய வெளியேற்ற முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டினார்.

    "இது முற்றிலும் ஒழுக்கக்கேடான கதை. மக்கள் படும் துன்பம் விரும்பிய தொலைக்காட்சி படத்தை உருவாக்கப் பயன்படுகிறது", "இவர்கள் உக்ரைனின் குடிமக்கள், உக்ரைன் பிரதேசத்திலிருந்து வெளியேற அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்."என்று செய்தித் தொடர்பாளர் எழுத்துப்பூர்வ செய்தியில் தெரிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)



  • 16:47 (IST) 07 Mar 2022
    உக்ரைன் போர் - 16 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு

    உக்ரைனில் இருந்து இதுவரை 16 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சுமி பகுதியில் உள்ள 600 மாணவர்களையும், அண்டை நாடுகளில் உள்ள 3 ஆயிரம் பேரையும் மீட்க தூதரகம் நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.



  • 16:10 (IST) 07 Mar 2022
    சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

    உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.



  • 15:34 (IST) 07 Mar 2022
    ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு

    சுமி உள்ளிட்ட நகரங்களிலிருந்து இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதி. மேலும், உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புதினை மோடி பாராட்டினார்.இருவரும், சுமார் 50 நிமிடம் ஆலோசித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது.



  • 15:33 (IST) 07 Mar 2022
    ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு

    சுமி உள்ளிட்ட நகரங்களிலிருந்து இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதி. மேலும், உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புதினை மோடி பாராட்டினார்.இருவரும், சுமார் 50 நிமிடம் ஆலோசித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



  • 15:20 (IST) 07 Mar 2022
    உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் மோடி - செலன்ஸ்கி பாராட்டு

    ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை முயற்சிக்கும் பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பான விவரங்களையும் மோடியிடம் தெரிவித்தேன்.உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.



  • 14:27 (IST) 07 Mar 2022
    மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை!

    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.



  • 14:27 (IST) 07 Mar 2022
    ஓரிரு நாட்களில் தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கபடுவார்கள்!

    உக்ரைனில் இருந்த பெரும்பாலான தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்பட்டு விடுவார்கள் என எம்.பி.திருச்சி சிவா கூறியுள்ளார்.



  • 13:43 (IST) 07 Mar 2022
    பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு.. நாகை வீரர் பலி!

    மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் நாகை மாவட்டம் கீழையூர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஞானசேகரன் (45) உயிரிழந்தார்.



  • 13:42 (IST) 07 Mar 2022
    உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது அரசின் கடமை!

    உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது இந்திய அரசின் கடமை. ஈராக், லெபனான் நாடுகளில் போர் ஏற்பட்டபோது எந்தவிதமான பிரச்சாரமும் இன்றி விமானப்படை, கப்பற்படை உதவியுடன் இந்தியர்களை காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக மீட்டது. போரில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • 13:36 (IST) 07 Mar 2022
    உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுடன் எம்.பி.க்கள் சந்திப்பு!

    உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 120க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தமிழக எம்.பி.க்கள் குழு கலந்துரையாடல் நடத்தினர்.



  • 13:36 (IST) 07 Mar 2022
    ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்.. அப்பல்லோ மருத்துவர்கள்!

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மரணம் குறித்த, ஆறுமுகசாமி ஆணையம்’ மீண்டும் விசாரணையை தொடங்கியது. முதல் நாள் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், நடக்க முடியாத பிரச்சினைகள் இருந்தன. மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறினார் என மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.



  • 13:05 (IST) 07 Mar 2022
    மதுபான பார்களை மூட உத்தரவு.. டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீட்டு மனு!

    6 மாதங்களுக்குள் மதுபான பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:02 (IST) 07 Mar 2022
    உக்ரைன் அதிபரிடம் 35 நிமிடம் பேசிய மோடி

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திய பிரதமர் மோடி 35 நிமிடங்கல் பேசியுள்ளார்.



  • 12:46 (IST) 07 Mar 2022
    உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு

    இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்காக உக்ரைன் நாட்டு அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ள்ளார் பிரதமர் மோடி. மேலும் சுமி நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தொடர்ந்து உதவவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 12:09 (IST) 07 Mar 2022
    போர் எதிரொலி - எண்ணெய் விலை உயர்வு

    ரஷ்ய உற்பத்திகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% வரை அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் பேரலுக்கு 13 டாலர் வரை உயர்வு



  • 12:07 (IST) 07 Mar 2022
    புடின், ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை – மோடி முடிவு

    நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் அலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள சுமியில் இருந்து 700 இந்திய மாணவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய நிலையில் இந்தியா தற்போது இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 11:43 (IST) 07 Mar 2022
    4 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிப்பு

    ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளுக்கு இணங்க உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கார்கிவ், கீவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம்



  • 11:38 (IST) 07 Mar 2022
    தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

    எத்தனை சோதனை வந்தாலும் உறுதியோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கழகத்தைக் காப்போம்; கவலை வேண்டாம் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 11:34 (IST) 07 Mar 2022
    மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே திராவிட மாடல்

    தொழில் வளர்ச்சியை உயர்த்தி மக்களுக்கு சிறப்பான வாழ்வை அளிப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 10:59 (IST) 07 Mar 2022
    இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா!

    இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் அமையவுள்ளது என்பது பெருமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும் என்றார் முதல்வர்.



  • 10:41 (IST) 07 Mar 2022
    17,476 பேருக்கு வேலை வாய்ப்பு!

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ள 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 17,476 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 10:24 (IST) 07 Mar 2022
    தடைகள் போதுமானதாக இல்லை: உக்ரைன் அதிபர் அதிருப்தி

    ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.



  • 10:04 (IST) 07 Mar 2022
    தங்கம் விலை உயர்வு!

    ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.40,000 ஐ தாண்டியது.



  • 09:56 (IST) 07 Mar 2022
    போரை நிறுத்த ரஷ்யாவை வலியுறுத்த வேண்டும்: சீனாவுக்கு ஆஸி., வேண்டுகோள்

    உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வலியுறுத்தினார்.



  • 09:52 (IST) 07 Mar 2022
    மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்

    உக்ரைனின் மைகோலைவ் நகரில் ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த காணொளியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.



  • 09:24 (IST) 07 Mar 2022
    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: தடை விதிக்க ஆலோசனை

    கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யாவை ஐரோப்பா நம்பியுள்ளது. எனினும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தடை விதிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகிறது.



  • 09:24 (IST) 07 Mar 2022
    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: தடை விதிக்க ஆலோசனை

    கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யாவை ஐரோப்பா நம்பியுள்ளது. எனினும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தடை விதிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகிறது.



  • 09:19 (IST) 07 Mar 2022
    உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சு?

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



  • 09:17 (IST) 07 Mar 2022
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 09:16 (IST) 07 Mar 2022
    இலங்கையில் எரிபொருள் கடும் தட்டுப்பாடு

    இலங்கையில் எரிபொருள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.



  • 09:01 (IST) 07 Mar 2022
    1038 தமிழக மாணவர்கள் மீட்பு: அமைச்சர்

    உக்ரைனில் இருந்து இதுவரை 1038 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.



  • 08:40 (IST) 07 Mar 2022
    மருத்துவ படிப்பை தொடர உதவி வேண்டும்: அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

    இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்று தாயகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



Live Updates Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment