முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது
மக்களுக்கான திட்டங்களை அறிவித்தால் அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிக்காவிடில் உப்பு, சப்பில்லை என விமர்சிப்பார்கள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும். அரசை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டத்தை திமுக நடத்துகிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென கூட்டத்தை நடத்தவில்லை.
தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. தோற்பேன் என கருத்துக்கணிப்பில் கூறினார்கள்; ஆனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.’ இவ்வாறு கூறினார்.