Advertisment

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pon Radhakrishnan

குடியரசுத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதவரளிக்கும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிமுக ஆதரவளிக்கும் என நம்புகிறேன். தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முற்பட்டது பாஜக-வைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறினார்.

Bjp Pon Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment