Advertisment

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கவில்லை - மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார்

தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை அதன் அவதானிப்புகளை அனுப்பியுள்ளது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nep tamil nadu, nep policy india, national education policy 2020, nep 2020, tamil nadu 2 language policy, tamil nadu news, union minister tamil nadu news, தேசிய கல்விக் கொள்கை, தமிழ்நாடு எதிர்க்கவில்லை. மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார், tamil nadu national education policy, chennai news, indian epxress, indian express news, indian epxress chennai live updates

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கூறப்படும் எதிர்ப்பானது ஒரு ஊகம், அந்த எதிர்ப்பு ஊடகங்களில் மட்டுமே வெளிவருவதாக மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறினார்.

Advertisment

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை. ஆனால், பரிசீலனைக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் சனிக்கிழமை கூறினார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு இருப்பாதாக கூறப்படுவது ஒரு ஊகம், அந்த எதிர்ப்பு ஊடகங்களில் மட்டுமே வெளிவருவதாக மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறினார்.

“தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை அளித்து எழுதிய கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது. அங்கன்வாடிகள் போன்ற சில பரிந்துரைகள் நேர்மறையான குறிப்பில் எடுக்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் செய்தியாளர்களிடம் கூறினார்.

சித்தூரில் உள்ள ஸ்ரீ சிட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) 5வது பட்டமளிப்பு விழாவில் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார், “தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலளித்தது மற்றும் அதன் அவதானிப்புகளை மிக அழகாக அளித்துள்ளது. சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதால், இது குறித்து விவாதிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு என்பது ஊடகங்களின் கற்பனை கதை மட்டுமே. மாநில அரசு எழுதியுள்ள கடிதத்தில் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக எழுதவில்லை” என்று மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறினார்.

சொந்தமாக கல்விக் கொள்கையைக் கொண்ட மாநில அரசின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், நாடு முழுவதும் ஒரே சீரான தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு வழங்கிய ஒரு பரந்த கட்டமைப்பு என்று பதிலளித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறுகையில், “தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் வேலை செய்ய மாநிலங்களுக்கு ஒரு தேசிய பாடத்திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்தமாக கல்விக் கொள்கை இருப்பதைப் போல, தமிழ்நாடு அதற்கென கல்விக் கொள்கை கொள்கையை வைத்திருக்கலாம்” என்று கூறினார்.

இந்தியை அமல்படுத்துவதை எதிர்க்கும் மாநில அரசின் இரு மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார், குறிப்பிட்ட மொழியைக் கற்குமாறு யாரையும் மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்று அமைச்சர் கூறினார். மேலும், ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஷயம் என்று கூறினார்.

“மத்திய அரசு தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கிறது. தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் செழிக்க வேண்டும்.” என்று சுபாஸ் சர்கார் கூறினார்.

முறையான மற்றும் தரமான நல்ல கல்வியை உறுதி செய்வதற்காக, வேர்களை வலுப்படுத்த வேண்டும். அனைத்து பாடங்களிலும் அனைத்து மாணவர்களும் இந்திய அறிவு முறையைப் பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் வலியுறுத்தினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu India Nep 2020
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment