Advertisment

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இடது சாரி தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் தேர்வு குறித்து பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அடக்குமுறையை ஏவாதே, மாணவர்கள், இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரி தொழிற்சங்கங்களின் சார்பில் சென்னை சேப்பாக்கம் அருகே இன்று (அக். 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநில துணை தலைவர் பொன்முடி, முனுசாமி (ஏஐசிசிடியு), சிவகுமார் (ஏஐயுடியுசி) ஆகியோர் பேசினர்.

இதில் சிஐடியு மாநில செயலாளர் டி.ஏ.லதா, சிஐடியு தென்சென்னை மாவட்ட செயலாளர், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.காசிநாதன், பி.என்.உண்ணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment