Advertisment

பரோலில் வரும் சசிகலா தங்குவது எங்கே? 4 இடங்கள் பரிசீலனை

வி.கே.சசிகலா பரோலில் வந்ததும், அவர் தங்குவதற்கு 4 இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.ஜெயலலிதா முன்பு தங்கிய சிறுதாவூர் பங்களாவும் அவற்றில் ஒன்று!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
vk sasikala on parole,vk sasikala seeking parole to see m.natarajan, tamilnadu government no objection to v.k.sasikala parole

வி.கே.சசிகலா பரோலில் வந்ததும், அவர் தங்குவதற்கு 4 இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.ஜெயலலிதா முன்பு தங்கிய சிறுதாவூர் பங்களாவும் அவற்றில் ஒன்று!

Advertisment

வி.கே.சசிகலா, இன்று (அக்டோபர் 5) அல்லது நாளை பரோலில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஏழரை மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி பலர் அவரை சந்தித்ததாகவும், சசிகலாவே விதிகளை மீறி சிறையை விட்டு வெளியேறியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் தனது நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் இறந்த தருணங்களில்கூட சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க வில்லை. அரசியல் ரீதியாக அவரது அணிக்கு தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களிலும் அவர் தமிழகம் வர முயற்சிக்க வில்லை.

வி.கே.சசிகலாவின் கணவர் ம.நடராஜன், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரம், கிட்னி, நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அக்டோபர் 3-ம் தேதி இரவில் அவருக்கு கல்லீரல் மாற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடராஜன் உடல் நிலையைத் தொடர்ந்து, சிறையில் இருந்து பரோலில் வெளியே வர முடிவெடுத்தார் சசிகலா. எனினும் சசிகலா கணவர் நடராஜன், நிஜமாகவே உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாரா?, சசிகலா பரோலில் தமிழகம் வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என இரு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கக் கோரி தமிழக அரசுக்கும் கர்நாடக சிறைத்துறை கடிதம் எழுதியிருக்கிறது.

ஆக, சசிகலாவின் பரோல் விடுதலை தமிழக அரசின் கைகளுக்கு வந்தது. ஒருவழியாக இந்த விவகாரத்தில் அரசியலைக் கலக்காமல், சசிகலா பரோலுக்கு தமிழக அரசும், போலீஸ் துறையும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டன. இன்று (5-ம் தேதி) இது தொடர்பான கடிதம் தமிழக அரசிடமிருந்து கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை சசிகலா பரோலில் வெளி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவை வரவேற்று அழைத்து வர, டிடிவி.தினகரன் இன்று பிற்பகலில் பெங்களூரு விரைந்தார். அவரது ஆதரவாளர்களும் பெங்களூரு விரைகிறார்கள். அவர்கள் சசிகலாவை வரவேற்று அழைத்து வருவார்கள்.

சிறைக்கு செல்லும்வரை சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியிருந்தார். ஆனால் தற்போது அந்த இல்லத்தை அரசு கைப்பற்றி நினைவு இல்லமாக்கும் முயற்சியில் இருப்பதால், சசிகலா அங்கு செல்ல வாய்ப்பில்லை.

சென்னையை அடுத்த சிறுதாவூரில் சசிகலா குடும்பத்தினருக்கு உரிய பங்களா இருக்கிறது. முன்பு ஜெயலலிதா அவ்வப்போது சென்று வந்த பங்களா இது. அங்கு சென்று தங்கியபடி, சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் சென்று தனது கணவரையும் சசிகலா கவனிப்பார் என கூறப்படுகிறது.

அதேசமயம், டிடிவி.தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் இல்லம், டாக்டர் வெங்கடேஷின் இல்லம், சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் இல்லம் ஆகியவற்றையும் சசிகலாவின் உறவினர்கள் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். மேற்படி 4 இடங்களில், ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டிருக்கும் குளோபல் மருத்துவமனைக்கு சென்று வர வசதியான ஒரு இடத்தை சசிகலா தேர்வு செய்வார் என தெரிகிறது.

 

M Natarajan Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment