Advertisment

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் - ஐகோர்ட்டில் வைகோ வாதம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news todaய்

Tamil nadu news today : வைகோ ஆஜர்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கும் வரை சட்டரீதியாக தொடர்ந்து போராட உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, கடந்த 2013 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான வைகோ வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையால் மனுதாரர் (வைகோ) எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு எந்த விதமான அடிப்படை உரிமை இல்லை.

சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் வைகோவின் இணைப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. டில்லியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னையில் வழக்கு தொடர முடியாது. எனவே அபராதத்துடன் வைகோவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்கும் வரை தனது சட்டரீதியாக போராட்டம் தொடரும் எனவும், ஐரோப்பிய உள்ளிட்ட பிற நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கியதை மேற்கோள் காட்டி அடுத்த விசாரணையில் தன்னுடைய வாதம் இருக்கும் என வைகோ தெரிவித்தார்.

Vaiko Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment