Advertisment

ஆளுநர் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் கட்சிகள் : இதுதான் காரணம் !

குடியரசு தினத்தையோட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஆளுநர் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் கட்சிகள் : இதுதான் காரணம் !

குடியரசு தினத்தையோட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார் “ குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஆனால் அந்த விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துதிருக்கிறோம். மேலும் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுயுறுத்துகிறோம்.

பொங்கலுக்கு வெளியிட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும் அரசின் இலச்சினையும் இடம்பெறவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் நிலவியது. இது தமிழ் மக்கள் உணர்வை புண்படுத்தியது. இந்நிலையில் இந்த முறை தமிழ்நாடு பெயர் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு நலன்களைக் கருத்தில் கொண்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் தற்போதைய ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். தம்ழிநாடு அரசுக்கு இணக்கமான  ஆளுநரை நியமிக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment