தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்று அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை சமீப காலமாக மோசமடைந்துள்ளது என்று சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. மேலும் விஜய் காந்தின் உடல் நிலை நன்றாக இருந்திருந்தால் தமிழக அரசியல் களமே மாறியிருக்கும் என்றும் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அவர் சிகிச்சை பெறும் செவிலியருடன் எடுத்த புகைப்படம் வெளியானது. அது சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் விருதுநகர் கூட்டத்தில் பேசிய பிரேமலதா “ விஜய காந்த் உங்கள் அனைவரையும் விசாரித்தார். மேலும் அவர் உடல் நிலை நன்றாக உள்ளது. பேசுவதிலும், நடப்பதிலும் தான் சிரமம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.