சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்வு பணிகளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் இன்று பார்வையிட்டார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாகவும், விரைவில் பொதுத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.