Vikravandi Election Result: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிட்டனர்.
விக்கிரவாண்டியில் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மொத்தம் 1,13,766 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாலர் கந்தசாமி 2,921 வாக்குகளும் பெற்றனர்.
இந்த வெற்றி மூலம் திமுகவின் தொகுதியை அதிமுக தன்வசமாக்கியுள்ளது. இதே போல, நாங்குநேரி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.