சென்னை நகரில் விநாயகர் சதூர்த்தி அன்று மூவாயிரத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை கடலில் இன்று கரைத்தனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, காமராஜர் சாலை வழியாக பட்டினம்பாக்கம் கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டது.