ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால், இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக, கோயிலுக்குச் சென்று வழிபட்ட விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவர், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கும் சென்றார். பிறகு, சிவாஜி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவர், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.