Advertisment

அதிமுக கொடியுடன் சசிகலா: கட்சியை கைப்பற்றுவாரா?

VK Sasikala Use Aiadmk Flog : அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.கே சசிகலா அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்திய விவகாரம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
அதிமுக கொடியுடன் சசிகலா: கட்சியை கைப்பற்றுவாரா?

VK Sasikala Use Aiadmk Flog : சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற விகே சசிகலா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வநத அவர், இன்று டிஸ்ஜார்ச் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தேவனஹள்ளியில் உள்ள பிரெஸ்டீஜ் குலாஃப்ஷயர் (Prestige Kulafshire) விடுதிக்கு அழைத்துசென்றபோது அவரது காரில் அதிமுக கொடி பறந்துகொண்டிருந்தது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால தோழியான சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது உறவினரான இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததால், இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விடுதலை நாளான ஜனவரி 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை முன்னேற்றம் காணவேண்டி இருந்ததால், மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சசிகலா விடுதலை அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இதில் அவர் சிறை செல்வதற்கு முன் அதிமுகவில் பொதுசெயலாளராக இருந்த நிலையில், அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார். ஆனால் சிறை சென்ற பிறகு அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒன்று சேர்ந்து கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.

இதனால் சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா அதிமுகவில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றார்போல் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று முதல்வர் பழனிச்சாமி பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சசிகலா அதிமுக இணைப்பு குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் அறிவிப்பை பொருட்படுத்தாத இரண்டு அதிமுக நிர்வாகிகள் (ராமநாதபுரம், மற்றும் திருச்சி) சசிகலா வருகையை வரவேற்று போஸ்டர் அடித்தனர். இதனால் அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சசிகலா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சசிகலா விடுதலையை மக்கள் நினைக்க கூடாது என்று அவர் விடுதலையான அன்று (ஜன.27) மற்றும் அடுத்த நாள் அதிமுக சார்பில் ஜெயல்லிதாவின் நினைவிடம் (மெரினா) மற்றும் நினைவு இல்லம் (வேதா இல்லம்) ஆகியவை திறக்கப்பட்டது. இது சசிகலா வருகையை மக்களிடம் இருந்து அகற்றும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. இதனால் சசிகலா மீண்டும் கட்சியில் இணைய சாத்தியமில்லை என்ற முடிவுக்கே கொண்டு சென்றது. ஆனால் ஜெயலலிதா நினைவு இல்லம் மற்றும் நினைவிடம் திறந்தாலும், ச்சிகலா வருகையை கொண்டாடுவது போலத்தான் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது உடல்நிலை சீரானதை தொடர்ந்து இன்று டிஸ்ஜார்ச் செய்யப்பட்ட சசிகலா காரில் உடனடியாக பிரெஸ்டீஜ் குலாஃப்ஷயர் (Prestige Kulafshire) விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பயணம் செய்த காரில் அதிமுக கொடி பறந்துகொண்டிருந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் ச்சிகலாவுக்கு கட்சியில் இடமில்லை. இதனால் அவர் கட்சி கொடியை பயனபடுத்தவும் அதிகராமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது என கூறியுள்ளார்.

ஆனால் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது. ஏனென்றால் அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். செயற்குழு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்குதான் உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார். அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான். அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும். சசிகலா தமிழகம் வந்த பின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் சசிகலா அதிமுகவை கைப்பற்றிவிடுவாரா? அல்லது அதிமுக அமமுக இணைப்பு ஏற்படுமா, அடுத்து கட்சியில் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில், அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர். அதிமுக-வில் இணைய கோரி டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் கூறுகையில், கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக பொது செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தற்போது, தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் இல்லாமல் கட்சி பொதுக்குழு கூட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தற்போது அதிமுகவில் மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும் தனது காரில் அதிமுக கொடி பறக்கவிட்டதன் மூலம் கட்சியில் தனக்கொன ஒரு இடம் உள்ளது என்று வலியுறுத்தும் சசிகலா ஒரு சட்டப்போராட்டத்திற்கு தாயராகி வருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் அப்போது தான் வெளியில் வந்துள்ளார். அவர் சென்னை வந்து என்ன சொல்கிறார் என்று பார்போம். அதன்பிறகு அதிமுக தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருமதி.சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தியது 100 சதவிகிதம் சரியான முடிவு என்று பத்திரிகையாளர் தராசு ஷாம் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment