Advertisment

அரசியல் சாசன உரிமையான வாக்குரிமையை தடை செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவு ரத்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
senthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

senthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Voting rights : அரசியல் சாசன உரிமையான வாக்குரிமையை தடை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisment

மதுரைக் கிளை உத்தரவு

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்கள், தெருக்களில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டப் பிரிவுகள் ஏதும் இல்லை எனவும், வாக்களிப்பது அரசியல் சாசன உரிமை எனவும் அரசியல் சாசனத்திற்கு முரணான இந்த அறிவுறுத்தல்களை பிறப்பிப்பது சிக்கலானது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்களில் வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என்ற மதுரைக் கிளை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க : பொள்ளாச்சி கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Madurai Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment