Advertisment

கமல்ஹாசன் பேச்சு புரியவே மாட்டேங்குது... கோனார் உரை கிடைக்குமா? கலாய்க்கும் தமிழிசை

கமல்ஹாசனின் பேச்சு புரியவில்லை. அதற்கு கோனார் உரை தேவை என சென்னை பாண்டி பஜாரில் ஜி.எஸ்.டி ஆய்வுக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan, bjp, tamilisai soundarrajan, GST

கமல்ஹாசனின் பேச்சு புரியவில்லை. அதற்கு கோனார் உரை தேவை என சென்னை பாண்டி பஜாரில் ஜி.எஸ்.டி ஆய்வுக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Advertisment

கமல்ஹாசன் நேற்று (19-ம் தேதி) தனது ட்விட்டர் பதிவில், ‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்’ என குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் இந்தப் பதிவில் மத்திய அரசை குறிப்பிட்டாரா, மாநில அரசை குறிப்பிட்டாரா, சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த ரெய்டை கூறினாரா? என தெளிவுபடுத்தவில்லை. வழக்கமாக சில ட்வீட்களுக்கு சற்று நேரத்தில் அவரே புரியும்படி பொழிப்புரை கொடுப்பது வழக்கம். இந்த ‘ட்வீட்’டுக்கு அதும் இல்லை.

இந்தச் சூழலில் தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று (20-ம் தேதி) ஜி.எஸ்.டி. தொடர்பான ஆய்வுக்காக சென்னை பாண்டிபஜார் பகுதிக்கு வந்தார். அதாவது ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தொகையை குறைத்து வழங்குகிறார்களா? என்பதை ஹோட்டல்களில் ஆய்வு செய்தார் அவர்.

சென்னை, தியாகராயநகர் பாண்டிபஜாரில் 2 ஹோட்டல்களுக்கு தமிழிசை சென்றார். ஒரு ஓட்டலில் இட்லி, வடையும் மற்றொரு ஓட்டலில் இனிப்பும் சாப்பிட்டார். அந்த பில்களில் ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் மட்டும் வசூலிக்கப்பட்டதை ‘செக்’ செய்தார்.

அப்போது தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

உணவுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 18 சதவீத வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. ஆனால் குஜராத் தேர்தலுக்காக வரியை குறைத்ததாக காங்கிரஸ் கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது.

ஜி.எஸ்.டி. வரியை குறைத்து விட்டு சில ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. உணவு பொருட்கள் விலை குறைய வேண்டுமே தவிர உயருவதற்கான வாய்ப்பே கிடையாது. ‘நான் பிராண்டட்’ அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரியே கிடையாது. அப்படி இருக்கும்போது உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு கிடையாது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு பாக்கெட்டுகளில் சப்ளை செய்யப்படும் பொருட்களுக்கு முந்தைய விலையை மறைக்காமல் குறைக்கப்பட்ட விலையை அருகில் ஒட்ட வேண்டும் என்பதுதான் அரசு உத்தரவு. ஓட்டல்களிலும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் பழைய விலையையும், இப்போதைய விலையையும் எழுதி வைக்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் வலைதளத்தில் அடிக்கடி தனது கருத்துக்களை பதிவிடுகிறார். அதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதற்கு கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது.’ என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

 

Bjp Kamal Haasan Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment