Advertisment

மே.16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

IMD Chennai: ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather, latest weather news, latest weather report, corona virus in tamil nadu, கொரோனா பாதிப்பு, latest weather update, weather Chennai, Chennai weather news, Chennai weather news today, Tamil Nadu weather, Tamil Nadu news weather, weather news in Tamil, Chennai weather forecast, Chennai weather news, IMD Chennai, rain news, latest rain update, today weather, tomorrow weather, வானிலை, வானிலை அறிக்கை, சென்னை வானிலை, இன்றைய வானிலை, தமிழ்நாடு மழை, tamilnadu rains, Chennai rains, சென்னையில் மழை, சென்னை வானிலை ஆய்வு மையம், வானிலை ஆய்வு மையம், வானிலை செய்திகள், சென்னை வானிலை

weather, latest weather news, latest weather report, corona virus in tamil nadu, கொரோனா பாதிப்பு, latest weather update, weather Chennai, Chennai weather news, Chennai weather news today, Tamil Nadu weather, Tamil Nadu news weather, weather news in Tamil, Chennai weather forecast, Chennai weather news, IMD Chennai, rain news, latest rain update, today weather, tomorrow weather, வானிலை, வானிலை அறிக்கை, சென்னை வானிலை, இன்றைய வானிலை, தமிழ்நாடு மழை, tamilnadu rains, Chennai rains, சென்னையில் மழை, சென்னை வானிலை ஆய்வு மையம், வானிலை ஆய்வு மையம், வானிலை செய்திகள், சென்னை வானிலை

Latest Weather Report: தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மறுநாள் சூறாவளி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை ஓட்டல்களில் கட்டண தனிமைப்படுத்துதல் அறைகள் : அரசு நடவடிக்கை

வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Weather Report: வானிலை மையம் அறிக்கை

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

சென்னையில் 5 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் நாளை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்திலும், 16ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 75 கி.மீ வேகத்திலும், 17ம் தேதி 65 முதல் 85 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என்பதால், இந்த குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment