Advertisment

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கையா? இன்று முக்கிய முடிவு

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பில்லை. எனவே சபாநாயகரின் நடவடிக்கை என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran, aiadmk, aiadmk merger, speaker dhanapal, cm edappadi palaniswami

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் இன்று (வியாழன்) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பில்லை. எனவே சபாநாயகரின் நடவடிக்கை என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் முகாமிட்டபடி, தமிழக ஆட்சியாளர்களுக்கு ‘தண்ணி’ காட்டி வருகிறார்கள். இவர்களில் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசியல் சாசன சட்டப்படி உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

அடுத்த சில நாட்களில், ‘கட்சிக்கு எதிராக செயல்பட்ட இவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது மேற்படி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தனர். தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சபாநாயகர் தனபாலை சந்தித்து 19 பேர் சார்பிலும் விளக்கம் அளித்தனர். ஆனால் இந்த விளக்கம் விரிவாக இல்லை என குறிப்பிட்ட சபாநாயகர் தனபால் மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கிடையே மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து, டிடிவி.தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் புதிதாக இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவரான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி. விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் புதிதாக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 21 ஆனது.

இவர்கள் அனைவரும் செப்டம்பர் 14-ம் தேதி நேரில் ஆஜராகி தன்னிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மேற்படி எம்.எல்.ஏ.க்கள் தற்போது நெருக்கடியான சூழலில் கர்நாடகாவில் தங்கியிருக்கிறார்கள். போலீஸை அங்கு அனுப்பி அவர்களை கரைக்க அரசுத் தரப்பு எடுத்த முயற்சி பலன் கொடுக்கவில்லை.

இந்தச் சூழலில் அத்தனை எம்.எல்.ஏ.க்களும் சென்னைக்கு வந்தால், அதில் எத்தனை பேரை ஆளும்தரப்பு வேட்டையாடும் என கூற முடியாது. எனவே இப்போதைக்கு கர்நாடகாவை விட்டு அசைய டிடிவி.தரப்பு தயாரில்லை. எனவே இன்று சபாநாயகர் தனபால் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் கூறவும் அவர்கள் தயாரில்லை.

இது குறித்து செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேட்டபோது, ‘சட்ட நிபுணர்களுடன் கலந்து முடிவெடுப்போம்’ என கூறினார். அரசுத் தரப்பில் இதை வைத்தே மேற்படி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஆலோசித்து வருவதாக தெரிகிறது. சபாநாயகர் தனபாலும், மேற்படி எம்.எல்.ஏ.க்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

சட்டமன்ற விதிமுறைகளை அறிந்த முன்னாள் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து நாம் கேட்டபோது, ‘சபாநாயகர் நினைத்தால், என்ன மாதிரியான நடவடிக்கையையும் எடுக்கலாம். ஆனால் அப்புறம் நீதிமன்றம் அதை ஏற்குமா? என்பது அடுத்த விவகாரம்!

ஆனால் பொதுவாக சட்டமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டாலோ, கட்சி மாறி வாக்களித்தாலோ எம்.எல்.ஏ.க்கள் மீது சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதுண்டு. ஒரு நோட்டீஸுக்கு பதில் தர தாமதமான குற்றத்திற்காக பெரிய நடவடிக்கைகள் எடுத்ததாக முன் உதாரணம் இல்லை. டிடிவி அணி தரப்பில் யாராவது ஒரு எம்.எல்.ஏ. நேரில் வருகை தந்து மேலும் அவகாசம் கேட்டு சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார் அவர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், அடுத்தடுத்த நாட்களில் சபாநாயகர் தனபாலின் பங்களிப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Ttv Dhinakaran Speaker Dhanapal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment