Advertisment

உள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி!

தேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டார் என குற்றம் சாட்டினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த எது? தடையாக உள்ளது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

உள்ளாட்சி தேர்தல்:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு (2017) நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்த உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு எதிராக திமுக சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், தன்னிச்சையான அமைப்பான மாநில தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உத்தரவின் படி, தேர்தலை அறிவித்திருந்தால், தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கும் மேல் முறையீடு செய்யவில்லை. 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்பில் தேர்தல், 1996 ஆம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

அந்த வரையறை அடிப்படையில் தற்போது ஏன் தேர்தல் நடத்தக் கூடாது எனவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த எது? தடுக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர் துரைசாமி, தீர்ப்பை அமல்படுத்த தான் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசின் அவசர சட்டமும் எந்த வகையிலும் தேர்தல் நடத்த தடையாக இல்லை. இந்நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யாவிட்டால் தேர்தல் நடத்துவதில் அக்கறை காட்ட மாட்டர் எனக் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, வழக்குகள் விசாரணை சுழற்சி முறைப்படி, தேர்தல் நடத்த அவகாசம் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து விளக்க மளிக்க தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment