'தாழ்த்தப்பட்ட சாதி எது?' பெரியார் பல்கலை தேர்வில் சர்ச்சை கேள்வி
New controversy risen due to the question (Which is the lowest caste in Tamil Nadu?) asked in the Salem Periyar University examination Tamil News: தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
Salem Periyar University Tamil News: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
இது தொடர்பாக அவர் பேசுகையில், "வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.