Advertisment

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை தவறாக பயன்படுத்தியது யார்? விசாரணைக்கு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை சில போலீசார் தவறாக பயன்படுத்துவதாக, அவரே நீதி மன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பல்நோக்கு வள மையம்

பல்நோக்கு வள மையம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெயரை சில போலீசார் தவறாக பயன்படுத்துவதாக, அவரே நீதி மன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் உறுதி கொடுத்துள்ளார்.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் இன்று வழக்கு விசாரணை தொடங்கிய போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிமன்றத்தில் இருந்த அரசு பிளீடரிடம், ‘‘சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் தனது பெயர் அடிபடுவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது தனது கவனத்திற்கு கொண்டு வரபட்டுள்ளது. இதைக் கேட்டவுடன் தான் அதிர்ச்சியடைந்தேன். நான் யாருக்கும் எந்த வழக்கிற்கும் தலையீடுவதில்லை’’ என தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து அரசு பிளீடம் விளக்கம் கேட்டார்.

’’தான் எந்த விசாரணையிலும் தலையிடவில்லை. தன் பெயர் தவறாக  பயன்படுத்தப்பட்டது தெரியவருகிறது. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தலைமை நீதிபதி எச்சரிக்கை செய்தார் .

இதற்கு பதில் அளித்த அரசு பிளீடர், இது சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment